கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மாங்குடி ரோடு சந்திப்பு அருகே 40 வயது மதிக்கத்தக்க நபர் குடிபோதையில் சாலை நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னை எழுந்து போக சொன்ன ஒருவரிடம் அவர் தகராறு செய்து என்னை போக சொல்ல நீ யார்? நான் யார் தெரியுமா? என கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனையடுத்து அந்த நபர் தனது சட்டையை கிழித்துக்கொண்டு ரோடு சரியில்லை, நாடு சரியில்லை, எல்லாத்தையும் மாற்ற வேண்டும் என கூறி தொடர்ந்து ஆபாசமாக பேசி ரகளை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.