தமிழ் சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரோஜா என்ற சீரியல் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் எனும் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரியங்கா நல்காரி பேட்டி ஒன்றில் தன் திருமணம் பற்றி பேசியுள்ளார்.

அதோடு நான் ஒரு ப்ராஜெக்ட்டில் கமிட்டானால் அதை முழுமையாக முடிக்காமல் வெளியில் வரமாட்டேன். ரோஜா தொடர் நடித்துக்கொண்டிருந்தபோது பிக் பாஸ் வாய்ப்பு வந்தது. அப்போது சீரியலில் இருந்து விலக முடியாது என்ற காரணத்தால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டேன் என கூறியுள்ளார். எப்போது கல்யாணம் என கேட்டதற்கு நானும் அதற்காகத் தான் வெயிட்டிங். கூடிய விரைவில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்கிறேன் என பிரியங்கா நல்காரி வெட்கத்தோடு தெரிவித்துள்ளார்.