கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் ரோடு வேம்பு அவென்யூ பகுதியில் சுவாமிநாதன்- ஜெயசுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிரஞ்சன், நிவேதா என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இருவரும் வடவள்ளி பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.

இதில் நிரஞ்சன் கணினி அறிவியலும், நிவேதா வணிக கணிதமும் படித்து வந்தனர். இருவரும் 12-ஆம் வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியாக 530 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். சிறு வயது முதலே பல்வேறு விஷயங்களில் ஒற்றுமையாக இருந்த இந்த இரட்டையார்கள் தேர்விலும் ஒரே மாதிரியான மதிப்பெண்களை பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.