துருக்கி நிலநடுக்கத்தின் பெரும் சேதத்திற்கு உறுதியற்ற சட்டவிரோத கட்டிடங்கள்தான் காரணம் என்று குற்றச்சாட்டை கட்டட ஒப்பந்ததாரர்கள் 171 பேருக்கு எதிராக கைதுவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. துருக்கி சிரியா எல்லையில் கடந்த ஆறாம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில் 43 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரமட்டமாகியன. பல நாட்கள் நடைபெற்ற மீட்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. அதே வேளையில் நிலநடுக்கம் தொடர்பாக துருக்கி அரசு பல்வேறு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி உறுதியற்ற சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியதாக கட்டிட ஒப்பந்ததாரர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கட்டிட ஒப்பந்ததாரர்கள் 171 பேருக்கு எதிராக துருக்கி அரசு கைதுவாரண்ட் பிறப்பித்துள்ளது. வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 171 பேரும் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.