தளபதி 67 திரைப்படத்தில் விஜய்யுடன் திரிஷா இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு மீண்டும் மார்க்கெட்டை ஏற்படுத்தி தந்தது. இந்த நிலையில் தற்போது 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளார் திரிஷா. விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தற்போது தளபதி 67 திரைப்படம் உருவாகின்றது. இத்திரைப்படத்தின் அப்டேட் வெளியான வண்ணம் இருக்கின்றது. நேற்றைய அறிவிப்பில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி, மன்சூர் அலிகான், மிஸ்கின், மாத்யூ, கௌதம் மேனன் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் நடிகை திரிஷாவும் படத்தில் இணைந்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. விஜயுடன் திரிஷா ஏற்கனவே கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என நான்கு திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்பொழுது தளபதி 67 திரைப்படத்தின் மூலம் ஐந்தாவது முறையாக இணைய இருக்கின்றார். இவர்கள் நடிப்பில் 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகின்றது. இத்திரைப்படத்தின் படபிடிப்பானது தற்போது காஷ்மீரில் நடந்து வருகின்றது. இதனால் விஜய், த்ரிஷா, பிரியாமணி, லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் தனி விமான மூலம் அங்கு சென்றிருக்கின்றார்கள் குறிப்பிடத்தக்கது.