கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அரசு பேருந்து காட்டுப்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆராட்டு ரோட்டில் சென்றபோது பேருந்து தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இதனையடுத்து எஸ்.எம்.ஆர்.வி சந்திப்பு அருகே சென்ற போது கழிவு நீரோடையில் பேருந்து கவிழும் நிலை ஏற்பட்டதால் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இதனால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார்.

அப்போதுதான் டிரைவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் பயணிகள் கீழே இறங்கினர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் டிரைவரை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் டிரைவர் மது போதையில் இருந்ததை உறுதி செய்தனர். இதனால் போக்குவரத்து கழக அதிகாரி பேருந்து டிரைவர் பெனட் என்பவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.