திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜலகம்பாறையில் இருக்கும் நீர்வீழ்ச்சியில் ஆண்டில் 8 மாதங்கள் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். இந்த நீர்வீழ்ச்சி ஏலகிரி மலைக்கு அருகே இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு வந்து குளித்து மகிழ்கின்றனர். இதனையடுத்து அருகே இருக்கும் முருகர், பெருமாள் கோவில்களுக்கு சென்று சுற்றுலா பயணிகள் சாமி தரிசனம் செய்கின்றனர்.