திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் விசாரணைக்கு வரும் நபர்களின் பற்களை பிடிங்கி துன்புறுத்தியதாக சமூக வலைதளங்களில் புகார்கள் வெளியானது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.

இந்த குற்றச்சாட்டின் காரணமாக பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் பல் பிடுங்கிய வழக்கில் இடைக்கால அறிக்கையை அமுதா ஐஏஎஸ் நேற்று அளித்துள்ளார். மேலும் அதன் அடிப்படையில் தற்போது பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.