முதல்வரின் காலை உணவுத் திட்டம் ஊரக பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் (1-5ஆம் வகுப்பு வரை) விரிவாக்கம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்கும். பேராசிரியர் அன்பழகன் திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.