தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2024-25 ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. நிதிநிலை அறிக்கையில் சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம் மற்றும் தாய் தமிலும் தமிழர் பண்பாடும் உள்ளிட்ட 7 தமிழ்க்கனவுடன் அறிவிப்புகள் வெளியானது.

பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்த  பட்ஜெட்டில், சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடி, வெம்பக்கோட்டை, உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல்துறை பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அகழ்வாராய்ச்சிக்கு என நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500கோடி ஒதுக்கீடு. தமிழ் இணைய மின் கல்வி நிலையங்களுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு. 2000 கி.மீ அளவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2030-க்குள் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். 2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.3,500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும்.

மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கிராமப் பகுதிகளில் சாலை திட்டப்பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சிங்காரச் சென்னை திட்டத்திற்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் அறிமுகம் செய்யப்படும். ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு இணைய வசதிகளை செயல்படுத்த ரூ.3,206 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.10 கோடி மானியம் பள்ளிவாசல் மற்றும் தர்காக்களை புனரமைக்க வழங்கப்படும். சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,429 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மீன்பிடி தடைக்கால மானியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கப்படும். தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகம் உயர்ந்துள்ளது. தெருநாய்களின் இனப்பெருக்க தடை திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என  தெரிவித்துள்ளார்.