2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திருக்குறள் ,சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார்.  அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்தவகையில் நடப்பு நிதியாண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற 2.5 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பாசன நிலப்பரப்பு 95லட்சத்து 39 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்.