2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திருக்குறள் ,சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார்.  அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

அவ்வகையில் , பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க மானியமாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.