பிரபல இயக்குனர் மணிரத்தினம் தற்போது அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இரண்டு பாகங்களாக பிரம்மாண்ட படத்தை உருவாக்கியுள்ளார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி, நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் பொன்னியின் செல்வன் 2 படத்தை கழுவி ஊற்றியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பொன்னியின் செல்வன் நாவல் கொடுத்த எதிர்பார்ப்பை படத்தில் எங்கேயும் கொடுக்கல. படத்தில் எந்த ஒரு இடத்திலும் பிரம்மாண்டமும் இல்லை.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்திலும் பிரமிக்க வைக்கிற மாதிரி எந்த சீனும் இல்லை. படத்துல வந்த யாருமே கேரக்டராவே தெரியல. ஏற்கனவே பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் முதல் பாகத்தை பார்த்தபோது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தற்போது இரண்டாம் பாகத்தையும் பார்த்தா ரொம்ப உக்கிரமாகிடுவான். புக் படிக்காதவன் பார்த்தால் இதெல்லாம் ஒரு கதையான கேட்டுட்டு போவான் என பங்கமாய் கலாய்த்து தள்ளியுள்ளார். மேலும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பலர் சப்போர்ட் செய்து பதிலடி கொடுத்து வருகிறார்கள்.