வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்ந்து 59,432 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை நிப்டி 156 புள்ளிகள் உயர்ந்து 17,478 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதே போல் கடந்த சில நாட்களாக சரிவை கண்ட அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று உயர்ந்துள்ளது.