அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அ.ம.மு. க பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், இது விடியல்லாட்சி அல்ல. விடியா மூஞ்சி ஆட்சி என்கின்ற அளவிற்கு இந்த ஆட்சி இன்றைக்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு பக்கம் ஏற்கனவே ஆட்சி நடத்திய பழனிச்சாமி. இன்னொரு பக்கம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற ஸ்டாலின்.

இவர்களால் வெறுப்படைந்திருக்கிற தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிகின்ற ஒரே மாற்றுக் கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. தொலைக்காட்சிகளிலும், சோசியல் மீடியாக்களிலும் நீங்கள் பார்த்திருப்பீங்க.. அம்மாவோ,  தலைவர் காலத்திலையோ ஒரு கட்சி மாநாடு நடந்தால் தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக தானாக போவார்கள்.

யாருக்கும் வண்டி வாகனம் ஏற்பாடு பண்ணி கொடுத்து, வாங்க வாங்கன்னு ரோட்டில் நின்னு கூவி, சினிமா தியேட்டர்ல இருந்து ரஜினிகாந்த் படம் டிக்கெட் எல்லாம் கொடுத்து கூப்பிட்டு பார்த்து இருக்கீங்களா ..? ஆனால் இன்றைக்கு மதுரையில தலைவர் மாநாடு அறிவித்தாலே…  அங்கு கூட்டம் கூடும். அம்மா அவர்கள்  எங்கே மீட்டிங் நடத்தினாலே அங்க மாநாடு மாதிரி இருக்கும் என தெரிவித்தார்.