தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஓவரா பேசுனா, பிரியாணி ஆக்கிடுவோம் என மிரட்டல் தொனியில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆர் எஸ் பாரதி அவர்கள் பேசுகின்ற பேச்சுக்கும்,  அவரது வயசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் இருக்கின்றது.

அண்ணன் ஆர்.எஸ் பாரதி அவர்கள் ஒரு மூத்த அரசியல்வாதி. தமிழகத்தில் இருக்காங்க. அவர்கள் பேசுகின்ற பேச்சில் ஒரு தரம் இருக்க வேண்டும். என்னுடைய தொண்டர்கள் வந்து அண்ணாமலையை பிரியாணி போட்டுருவாங்க  அப்படின்னா…. இது எல்லாம் அருவா புடிச்ச கை. மரத்தை அரிவாள் வச்சி வெட்டிய கை… நாளை காலையில் தோட்டத்தில் அருவா புடிச்சு மரத்தை வெட்ட தான் போகின்றேன்.

நாளைக்கு காலைல தோட்டத்தில் விவசாயம் பார்க்க போறேன். அரிவாள் யார் பிடித்தாலும் வெட்டத்தானே செய்யும்.  ஒரு விவசாய பிடிச்ச அருவா நல்லாவே வெட்டும். அதனால் ஆர்.எஸ் பாரதி அண்ணன் இந்த பயமுறுத்தி தமிழ்நாட்டுல அரசியல் பண்ணுவேன்னு நினைச்சா…. அதெல்லாம் எங்க கிட்ட நடக்காது. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஒரு கன்னத்துல அடிச்சீங்கனா… ஒரு கன்னத்தை காட்டுவதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டு இருக்கின்றேன் என தெரிவித்தார்.