அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்திய ஆவணப்படமான The Elephant Whisperers படம் ஆஸ்கார் விருதை வென்றது. இந்த ஆஸ்கார் விருதை வென்ற கார்த்திகி மற்றும் குனீத் மோங்கா ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை இந்த ஆவணப்படம் காட்டுகிறது. இந்த படத்திற்காக ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் முதுநிலை தம்பதி தொடர்பான இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.