
திருப்பூர் மாவட்டம் போடிப்பட்டி மடத்துக்குளம் வட்டாரத்தில் வேளாண்மைதுறை மூலம் மானிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கண்டாமிருக வண்டு மடத்துக்குளம் வட்டாரத்தில் நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம், சொட்டுநீர் பாசனத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஜிப்சம் ஏக்கருக்கு 200 கிலோ மானிய விலையில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் பங்குத் தொகையாக ரூ.401 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் பண்ணை கருவிகள் வழங்கும் திட்டத்தின் மூலம் விவசாயிகள் 1 மண்வெட்டி, 1 கடப்பாறை, 2 கதிர் அரிவாள், 1 இரும்புச் சட்டி, 1 களைக்கொத்து ஆகியவை அடங்கிய வேளாண்மை பண்ணைக் கருவிகள் தொகுப்பு கொடுக்கப்படுகிது. அதுவும் 50% மானியத்தில், விவசாயிகள் பங்குத் தொகையாக ரூ.1532 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும் தென்னையைத் தாக்கும் காண்டா மிருக வண்டுகளைக் கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சிப் பொறிகள் ஏக்கருக்கு 2 எண்களும், உயிரி பூஞ்சாணமான மெட்டாரைசியம் ஏக்கருக்கு 4 கிலோவும் வழங்கப்படுகிறது. இவையனைத்தும் 50% மானிய விலையில் வழங்கப்படுகிறது. எனவே இந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம விவசாயிகளும் இடுபொருட்களை மானிய விலையில் பெற்று செல்லுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.