தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக உயர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் “தசரா” படம் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது. இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் கலந்துரையாடி கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் நடிகையர் திலகம் படத்தில் நடித்த சாவித்திரி கதாபாத்திரம் மற்றும் தசரா படத்தில் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ஆகிய இரண்டில் எது உங்களுக்கு திருப்தியை கொடுத்திருக்கிறது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு கீர்த்தி சுரேஷ் கூறியதாவது, 2 கதாபாத்திரங்களுமே எனக்கு முக்கியமானவை தான். தசரா திரைப்படத்தில் கிராமிய பெண்ணாக வந்தேன். என் சினிமா வாழ்க்கையில் இந்த 2 கதாபாத்திரங்களும் முக்கியமானவை என தெரிவித்தார். மற்றொரு ரசிகர் நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்களாமே, திருமணம் எப்போது என்று கேட்டார். இந்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் பதிலளித்ததாவது, நல்ல மாப்பிள்ளை கிடைத்ததும் கண்டிப்பாக திருமணம் செய்துக்கொள்வேன். அதை முன்னதாகவே அனைவருக்கும் தெரிவிப்பேன்” ன்று கூறினார்.