தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளது.

அதோடு அங்கிருந்த பைக்குகளும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து திருச்சி சிவா வீடு தாக்கப்பட்டது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்த 6 பேரிடமும் அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. சிவா வீட்டின் அருகே நடந்த விழாவில் நேருவை தலைமை தாங்க அழைத்ததே இந்த பிரச்சனைக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இருவருமே திமுகவில் பெரிய தலைவர்கள் என்பதால் இந்த சம்பவம் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.