தமிழக அரசாணையை கடைபிடிக்காமல் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன..? என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், தமிழ் வளர்ச்சிக்காக அனைத்துத் துறையினரும் கடுமையாக பாடுபட வேண்டும்.

திராவிட மாடலில், “மாடல்” எனும் ஆங்கில சொல்லுக்கு தமிழ்சொல் என்ன?, அதை எதற்காக ஆங்கிலத்தில் பயன்படுத்துகின்றனர். முற்றிலும் அதை தமிழில் பயன்படுத்தலாமே என நீதிபதிகள் கருத்து கூறினர். இதையடுத்து வழக்கு விசாரணை பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.