தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையிலும் இது தொடர்பாக இதுவரை பாஜக தேசிய தலைமையோ அல்லது மாநில தலைமையோ இந்த கூட்டணியை ஏன் முறிந்தது என்ற தகவலை வெளியிடாமல் இருந்தது.  மேலும் கூட்டணி தொடர்பாக எந்த ஒரு கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று பாஜக தலைமை மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில தலைமைக்கு அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்து இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தான் அதிமுகவுடனான விவகாரத்தில் இன்னும் ஓரிரு மாதத்தில் ஒரு உரிய முடிவெடுத்து ஒரு தீர்வு காணப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தற்போது தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.  குறிப்பாக அவர்கள் தெரிவிக்கக்கூடிய கருத்து தேர்தலுக்கு இன்னும்  7 மாதங்களுக்கு மேல் இருக்கிறது. அப்படிப்பட்டிருக்கும் நிலையில் கூட்டணி விவகாரத்தை ஒரு மாதத்திற்கு பின் முடிவெடுப்பதற்கு பாஜக தலைமை திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதுவரை அதிமுக உடனான கூட்டணி பிளவு குறித்து தற்போது மாநில நிர்வாகிகள் வெளிப்படையாக பேச வேண்டாம். இன்னும் ஒரு மாத காலத்தில் அதுகுறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று பாஜக வட்டாரங்கள் நினைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.