சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சியளிப்பதாக பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையில் இருக்கும் சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சியளிப்பதாக சோசியல் மீடியாவில் செய்தி பரவியது. இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அந்த கோவிலில் குவிந்தார்கள்.

உடுமலை குட்டை கடலில் இருக்கும் சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரைச் சித்தர் காட்சியளிப்பதாகவும் அவரை தரிசனம் செய்தால் நோய்கள் தீரும் எனவும் செய்தி பரவியது. இந்த கோவிலில் இருக்கும் முருகன் சிலை வேலுக்கு இடையில் அந்த தேரை நீண்ட நேரமாக அசையாமல் இருந்தது. இவ்வாறு தேரை சித்தர் அவ்வப்போது தோன்றி காட்சியளித்து மறைவதாக பக்தர்கள் தெரிவித்து வழிபாடு செய்தார்கள்.