திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,   கட்சியை இன்று வரை வாழையடி வாழையாக வளர்த்துக் கொண்டு இருக்கின்றார்களே கட்சிக்காரர்கள்.  அவர்கள் தான்,  இந்த இயக்கத்தினுடைய உயிர் நாடி. அவன் தான் உயிர் நாடி. வேற எந்த கட்சியிலும் இந்த உயிர் நாடி உயிரோட கிடையாது…  நம்ம கட்சியில மட்டும் தான் உண்டு. நம்ம கட்சிக்கு வந்த சோதனை மாதிரி….  வேற எந்த கட்சிகாவது வந்து இருந்தா….  அந்த கட்சி இருக்கிற இடம் தெரியாமல் போய் இருப்போம்.

இந்த இயக்கத்தின் மீது வீசிய புயல்…..  இமயமலை வீசியிருந்தா கூட இமயமலை தூள் தூளா போயிருக்கும்.   கடல் பொங்கி போய் இருக்கும். ஆனால் அவ்வளவையும்  தாங்கிக் கொண்டு, இந்த இயக்கத்தை தலைவர்கள் வளர்த்தார்கள்… அந்த தலைவர்களுக்கு பின்னால் உறுதியாக  நின்றானே… அவன் தான் திமுகவின் அடிமட்ட தொண்டன். அவன்தான் இன்றைக்கு கோஷமிடுகிறவன்….

அவன் தான் வாக்கு கேட்கிறவன்… அவன்தான் நம்மை ஊர்வலம் அழைத்துப் போகிறவன்…  எனவே இந்த இயக்கத்தில் இருக்கின்ற ஒவ்வொரு தொண்டனும்…..  திமுக கழகத்தினுடைய காவல் தெய்வங்களாகத்தான் அவர்களை கருத வேண்டும்….மற்றவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் உண்டு. திமுககாரன் தொண்டர்கள் எவ்வளவு கொள்கை பிடிப்பு  பெற்றவர்கள் என்று… 13 வருஷம் அவங்க ஆளும் கட்சியாக  இருந்தாங்க… எதிர்க்கட்சியில் உக்கார்ந்து இருந்தோம்…  13 வருஷம் அவுங்க விளைஞ்ச காட்டுல மெய்யுற மாடு  மாதிரி எல்லாம் சம்பாதிச்சி இருந்தாங்க…

காலி பயல் எல்லாம் காரில் போனான்… ஆனாலும் அதை பார்த்து…. இது ஒரு வாழ்வா ? என்று நினைத்து…. அதை பற்றி கண்டுகொள்ளாமல் கட்சி பணி செய்தானே  அவன் எவ்வளவு பெரிய உறுதி வாய்ந்தவன்…  நம்மை விட அவன் தான் வைர நெஞ்சம் படைத்தவன்…  அதற்கு பிறகு பத்து வருஷம்….  மறுபடி நாங்கள் ஆண்டதை விட வெளியே இருந்தது தான் அதிகம். ஆனால் ஏன் இருந்தோம் ? கொள்கைக்காக இருந்தோம் என தெரிவித்தார்.