குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 முதன்மை எழுத்து தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி துரிதமாக நடைபெறுகிறது. குரூப் 2 முதன்மை தேர்வில் அதிக அளவிலான விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. குரூப் 2 தேர்வு தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார். புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது எனவும், நடப்பாண்டில் 32  தேர்வுக்கான முடிவுகளை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்..

மேலும் விடுமுறை நாள் உட்பட அனைத்து நாட்களிலும் விடைத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் மட்டும் 12,500 தேர்வர்கள் அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.