
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் நடைபயிற்சிக்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரமாக சில வாலிபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.
போதையில் இருந்த அவர்கள் மூதாட்டியை பார்த்ததும் அவரை சவுக்கு தோப்புக்குள் கடத்திச் சென்றனர். அங்கு மூதாட்டியின் துணியை கிழித்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர். அதோடு மூதாட்டியின் நகைகளை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், மூதாட்டியின் சத்தத்தை கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி சென்று பார்த்தனர்.
அதன் பிறகு அவர்கள் மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் மூதாட்டியை வன்கொடுமை செய்ததில் சுந்தரவேல் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் அவரை கைது செய்தனர் . அதோடு மீதமுள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி தெரிவித்துள்ளது.