தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறினார். அதன்படி இன்று காலை சென்னையில் உள்ள கமலாயத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தான் கையில் கட்டி இருக்கும் ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார். தான் காவல்துறையில் வாங்கிய லஞ்சப் பணத்தில் ரபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் கூறினார்.

என் நண்பர் ஒருவர் தான் எனக்கு இந்த வாட்சை பரிசாக கொடுத்தார். ரஃபேல் வாட்ச் வரிசையில் நான் 147-வது வாட்சை வாங்கினேன். இந்த வாட்சின் விலை வெறும் 3 லட்சம் மட்டும் தான். இந்த வாட்சை என்னுடைய நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவர் வழங்கினார் என்று கூறினார். மேலும் அண்ணாமலை ரபேல் வாட்ச் பில்லை வெளியிடுவதற்கு முன்பாகவே நெட்டிசன் ஒருவர் இணையதளத்தில் ரபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.