துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நலநடுக்கத்தால் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் துருக்கியில் மட்டும் 44 ஆயிரம் பேர் பலியாகினர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் முக்கிய நகரமான இஸ்தான்புல்லில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு மத்தியில் ஸ்டேடியம்-ல் அமர்ந்திருந்த ரசிகர்கள் துருக்கி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

துருக்கி அரசே ராஜினாமா செய். 20 ஆண்டுகளாக பொய்களை பேசி வருகின்றீர்கள், மக்களை ஏமாற்றுகின்றீர்கள். எனவே ராஜினாமா செய்யுங்கள் என கோஷங்கள் எழுப்பியதால் மைதானத்தில் பரபரப்பு நிலவியது. மேலும் அவர்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நினைவாக நூற்றுக்கணக்கான பொம்மைகளை ஆடுகளத்தில் வீசி எரிந்தனர். துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கம் தொடர்பாக அரசு அதிகாரிகள் சரியாக பதில் அளிக்காததால் மக்கள் கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் வரும் மே 14-ஆம் தேதி குடியரசு தலைவர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பு தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.