இந்தியாவில் நடைபெறும் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ஐபிஎல். நடப்பாண்டில் ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 16-வது ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 3:30 மணிக்கு நடைபெறும் 27-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணியின் கேப்டனாக சாம் கரண் இருக்கிறார். பெங்களூர் அணி முதலில் பேட்டிங் ஆட இருக்கிறது.

இந்நிலையில் பெங்களூர் அணியின் கேப்டனாக இன்று நடைபெறும் போட்டியில் விராட் கோலி இருக்கிறார். இந்த போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் டூ பிளசிஸ் காயம் காரணமாக இம்பாக் வீரராக களமிறங்க இருக்கிறார். இதனால்தான் விராட் கோலி இன்று நடைபெறும் போட்டியில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். இந்த போட்டியை தொடர்ந்து தற்போது 565 நாட்களுக்கு பிறகு விராட் கோலி மீண்டும் பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.