மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கருங்கல்பாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது கூடி இருந்த மக்களிடையே உரையாற்றிய மு.க.ஸ்டாலின் மறைந்த திருமுருகன் ஈவேரா விட்டுச்சென்ற பணிகளை அவரது தந்தை இவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்களிக்கமாறு கேட்டு கொண்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 85 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கின்றோம் என கூறினார். மீதி உள்ள 15 சதவீத வாக்குறுதிகளும் அடுத்த மூன்றாண்டுக்குள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வரும் மார்ச் மாத பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.