கேரள மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. அதாவது வயநாடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது திடீரென ஒரு கார் லேசாக உரசியுள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து திடீரென ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஷெரிப் மற்றும் ஆட்டோவில் பயணித்த அம்மணி என்ற பெண்மணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனர் ஷெரிபின் ஆட்டோவில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பயணம் செய்துள்ளார். அதாவது கேரளாவில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஷெரிபின் ஆட்டோவில் ராகுல் காந்தி பயணம் செய்துள்ளார். மேலும் ஷெரிபின் மறைவுக்கு எம்.பி ராகுல் காந்தி முகநூல் பதிவு மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.