ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கர் மாவட்டத்தில் குனுகிசான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சிறுமியை கடந்த ஆகஸ்ட் மாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்தச் சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் குனுகிசானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம், அவர் ஜாமினில் வெளிய வந்தார். அப்போது அது சிறுமியை தேடினார், அவர் அவரது அத்தை வீட்டில் தங்கி பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதை தெரிந்து கொண்ட அவர், சிறுமியிடம் சென்று வழக்கை வாபஸ் வாங்கும் படி பேசி உள்ளார்.  ஆனால் அதற்கு அந்த சிறுமி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அந்தச் சிறுமையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 7ம் தேதி மற்றொரு வாலிபருடன் சேர்ந்த அந்த பெண்ணை பைக்கில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர். அதன் பின் ரூர்கேலா மற்றும் தியோகரை சாலையை இணைக்கும் பகுதியில் சிறுமியை கொண்டு சென்று, அவரது தலையை தூண்டித்துக் கொலை செய்துள்ளனர். அதன் பின் அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பிராமணி ஆற்றில் தர்கேரா நாளில் மற்றும் பலுகாட் பகுதியில் வீசி உள்ளனர்.

இந்நிலையில் சிறுமியை காணவில்லை என்று அவர்களது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விசாரணை நடத்திய காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிறுமியை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குனுகிசானை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது மேல்கண்ட விபரங்கள் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.