இங்கிலாந்தில் விடுமுறை குரிய சம்பளத்தை முதலாளி முறையாக வழங்காததால் சமையல் கலை நிபுணர் ஹோட்டல் கிச்சனுக்குள் கரப்பான் பூச்சியை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லிங்கம் நகரத்தில் உள்ள ராயல் வில்லியம் என்ற உணவு விடுதியில் சமையல் கலை நிபுணராக டோனி வில்லியம்ஸ் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த உணவு விடுதியில் உரிமையாளருக்கும் சமையல் கலை நிபுணர் வில்லியம்ஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதாவது விடுமுறைக்குரிய சம்பளத்தை தனது முதலாளி முறையாக வழங்கவில்லை என்று அந்த உணவு விடுதியின் வேலையை வில்லியம்ஸ் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அந்த உணவு விடுதியில் உரிமையாளரை பழிவாங்கும் நோக்கத்தில் விடுதியின் கிச்சனுக்குள் இருபது கரப்பான் பூச்சிகளை வில்லியம்ஸ் விட்டுள்ளார். இது சிசிடிவி கேமராவில் பதிவானது. வில்லியம் இதுபோன்று செய்வேன் என்று உரிமையாளரிடம் ஏற்கனவே எச்சரித்து இருந்தார் என்பது கூறப்படுகின்றது. கரப்பான் பூச்சி உணவு விடுதியின் கிச்சனுக்குள் இருந்ததன் காரணமாக அந்த உணவு விடுதி தற்போது மூடப்பட்டுள்ளது.