தமிழ் சினிமாவில் 90s-களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் சிம்ரன். தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் சிம்ரன், தற்போது கிடைக்கும் ரோல்கள் பிடித்தால் நடித்து வருகிறார். அதேபோன்று சிம்ரன் சென்னையில் ரெஸ்டாரன்ட் ஒன்றும் துவங்கி பிரபலமாக நடத்துகிறார். இவருடன் பிறந்தவர்களில் ஒருவர் தான் மோனல்.

இவர் தமிழில் பார்வை ஒன்றே போதுமே, பத்ரி, லவ்லி, சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டுமின்றி ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ஒரு திரைப்படங்கள் நடித்துள்ளார் மோனல். நாயகியாக இவருக்கு நல்ல படவாய்ப்புகள் வந்த சமயத்தில் கடந்த 2002-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம் என கூறப்பட்டது.