பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்த மாரி செல்வராஜ் இப்போது மாமன்னன், வாழை போன்ற திரைப்படங்களை இயக்கி முடித்துள்ளார். இதில் மாமன்னன் திரைப்படமானது ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்தபடியாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை டைரக்டு செய்யும் மாரி செல்வராஜ், அப்படத்தை முடித்ததும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறாராம்.

முன்னதாக தனுஷ்-மாரி செல்வராஜ் இணைந்த கர்ணன் திரைப்படம் மெகா ஹிட்டடித்தது. தற்போது இந்த புது படத்தை பான் இந்தியா திரைப்படமாக இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது. அதோடு இந்த படத்தை தன் வுண்டர்பார் பிலிம்ஸ் வாயிலாக தயாரித்து மீண்டும் தயாரிப்பில் இறங்க போகிறாராம் தனுஷ்.