நாட்டு மக்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் நன்றி என்று பிரதமர் மோடி பதிவிட்டு இருக்கிறார்.

5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய சட்டமன்ற தேர்தல்களில்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில், மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான்,  சத்தீஸ்கர் ஆகிய  மூன்று மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்ற நிலையில்,  நாட்டு மக்களின் அன்புக்கும்,  நம்பிக்கையும் நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார்.

மேலும், இந்தியாவை வெற்றி பெறச் செய்யவும்,  மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து பாஜக பாடுபடும். தெலுங்கானாவுடனான எங்கள் பந்தம் பிரிக்க முடியாதது. உழைத்த கட்சியினருக்கு நன்றி. மக்கள் நல்லாட்சி வளர்ச்சி அரசியலில் மட்டுமே நம்பிக்கை கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.