லியோனல் மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மெஸ்ஸியைப் பார்க்கத் திரண்டனர். இவ்வளவு பெரிய கூட்டம் கூடினாலும், எந்தவிதமான நெரிசலும் குழப்பமும் இல்லாமல் நிகழ்ச்சியை மும்பை காவல்துறை திறமையாகக் கையாண்டது.
குறிப்பாக, இதற்கு முன்னர் கொல்கத்தாவில் நடந்த மெஸ்ஸியின் நிகழ்வில் ஏற்பட்ட பெரும் குழப்பத்துடன் ஒப்பிடும்போது, மும்பை காவல்துறையின் ஒழுங்கமைவு வெகுவாகப் பாராட்டப்பட்டது. மும்பை காவல்துறையின் அருமையான மேலாண்மையைப் பாராட்டி, மைதானத்திற்கு வெளியே கூடியிருந்த மெஸ்ஸி ரசிகர்கள் திடீரென ஒரே குரலில் “Thank you, Mumbai Police” என்று கோஷமிட்டு கைதட்டினர்.
The entire crowd thanked the Mumbai Police for their exceptional management throughout the messi event
– This is so wholesome 🤍🫶🏻!! pic.twitter.com/5OPl4G8RAm
— 𝐉𝐨𝐝 𝐈𝐧𝐬𝐚𝐧𝐞 (@jod_insane) December 15, 2025
அர்ஜென்டினாவின் ஜெர்ஸிகளை அணிந்திருந்த ரசிகர்கள் மத்தியில், காவலர்கள் உணர்ச்சிவசப்பட்ட முகத்துடன் சிரித்துக்கொண்டிருந்த காட்சியும் காணொளியில் பதிவாகியுள்ளது. இந்த நெகிழ்ச்சியான காணொளிகள் எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. ஒரு விளையாட்டு நிகழ்வின் முடிவில், ரசிகர்கள் காவல்துறைக்கு நன்றி தெரிவிப்பது அபூர்வமான, மனிதநேயம் நிறைந்த ஒரு காட்சியாகப் பார்க்கப்படுகிறது.
