ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் இப்போது ஹிந்தி திரையுலகில் தான் அதிகம் நடித்து வருகிறார். எனினும் அவர் எப்போது தென்னிந்திய படங்களில் நடிக்க துவங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதுகுறித்து கேட்டால் “விரைவில்” என்ற ஒரே பதிலை தான் ஜான்வி பேட்டிகளில் கூறி வந்தார். இந்த நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக NTR30 படத்தில் ஜான்வி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஜான்வி 4 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று இருக்கிறாராம். சமந்தா உள்ளிட்ட சில டாப் ஹீரோயினிகள் வாங்கும் சம்பளத்தை தன் முதல் தெலுங்கு படத்திலேயே ஜான்வி வாங்குவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீதேவி மகள் மற்றும் ஜான்வி கபூருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதால் இவ்வளவு சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.