பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சீரியல் நடிகை பாவனி ரெட்டி அவரது முதல் கணவர் கண் எதிரிலேயே தற்கொலை செய்து கொண்டது பற்றி உருக்கமாக பேசியிருந்தார். இதையடுத்து அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற அமீர், பாவனியை காதலிப்பதாக தெரிவித்தார். அதன்பின் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபின், பாவனி அமீர் காதலை ஏற்றுக் கொண்டார். இப்போது அவர்கள் ஜோடியாக படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளனர். அதோடு அவர்கள் ஜோடியாக வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தங்களை பற்றி வரும் ட்ரோல்களுக்கு பாவனி பதிலடி கொடுக்கும் அடிப்படையில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் “ஏற்கனவே திருமணமான பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்தால் அதை பற்றி அனைவரும் பேசுகின்றனர். ஆனால் விவாகரத்தான ஒரு ஆண் பெண் ஒருவரை மறுமணம் செய்தால் பாதி பேருக்கு அவரது டைவர்ஸ் பற்றி தெரிவதுகூட இல்லை” என வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.