காதல் நினைவு சின்னமாக போற்றப்படும் தாஜ்மஹால், உத்தரப்பிரதேசம் ஆக்ராவில் இருக்கிறது. உலக அதிசயங்களில் இடம்பிடித்த தாஜ்மஹாலை காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கு வரும் இந்திய மக்களிடம் 50 ரூபாயும், சார்க் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளை சேர்ந்தவர்களிடம் 540 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. பிற நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் ரூபாய்.1,100 கட்டணமாக வசூல்செய்யப்படுகிறது.

எனினும் 15 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு கட்டணமில்லை. இந்த நிலையில் ஷாஜகானின் 368-வது நினைவு தினத்தை முன்னிட்டு(உர்ஸ் விழா) வருகிற 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பொதுமக்கள் தாஜ்மஹாலை இலவசமாக பார்த்து மகிழலாம் என உர்ஸ் குழுவின் தலைவர் இப்ராஹிம் சைதி தெரிவித்து உள்ளார்.