குஜராத் மணிநகர் பகுதியில் பெரும்பாலான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் பயில்வதற்காக தமிழ்வழி செயல்பட்டு வந்தது. எனினும் தற்போது அந்த பள்ளி மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் மீண்டும் தமிழ் வழி பள்ளியை திறக்க வேண்டும் என அங்குள்ள தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகமதாபாத் அருகே தமிழ் சங்கம் அறக்கட்டளை மூலமாக 1973 முதல் தமிழ் வழி பள்ளி நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பரவலின் போது ஏராளமானோர் ஆங்கில பள்ளியை நாடியதால் இந்த பள்ளி மூடப்பட்டது. தற்போது மீண்டும் தமிழ் பள்ளியை திறக்க அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.