பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி, நோட்டீசும் அனுப்பப்பட்டது. இருந்தாலும் கோர்ட்டின் இத்தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகிறது.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அவரது தொகுதியான வயநாட்டில் காங்கிரஸ் அலுவலகத்தில் டெலிபோன், இன்டர்நெட் இணைப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள அவரது அரசு வீட்டை காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.