தென்காசி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி சி.எஸ்.ஐ சர்ச் தெருவில் ராஜதுரை லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜதுரை ஒரு மாணவரை சக மாணவர்கள் முன்னிலையில் கேலி, கிண்டல் செய்து அநாகரிகமாக பேசியதாக தெரிகிறது. மேலும் அந்த மாணவனை உணவு இடைவேளையின் போது அழைத்து ராஜதுரை ஆபாசமாக பேசியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த மாணவரிடம் பெற்றோர் விசாரித்தபோது மாணவன் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், ராஜதுரை மாணவனிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது உறுதியானது. இதனால் போக்சோ மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் ராஜதுரையை  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.