தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் விஜய் சேதுபதி. மக்கள் செல்வனாக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் பார்ஸி வெப் தொடர்காக நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் டயட் பற்றி தன் கருத்துக்களை சுவாரசியமாக பகிர்ந்திருக்கிறார். அதாவது “சாப்பாட்டில் டயட் இருப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

எப்போதும் சுவையான உணவை மட்டுமே சாப்பிட விரும்புகிறேன். சுவையான உணவை சாப்பிடா விட்டால், ஒருவரின் வாழ்க்கையில் சுவை இருக்காது. குறைந்த கலோரிஸ் கொண்ட உணவுகளை மட்டும் உண்ணவேண்டும் என்பது போல் இல்லாமல் நல்ல உணவை சாப்பிடவேண்டும். மேலும் விரும்பியதை சாப்பிட வேண்டும் என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.