தமிழகத்திலேயே  முதன் முதலாக பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர், டாஸ்மாக் கடைகளில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில் ரூ.200, ரூ.100 வீதம் விற்பனைக்கு வருகிறது. இந்த பீர் வகை சென்னையில் முதற்கட்டமாக வெளியாக உள்ளது என்று டாஸ்மாக் மேலாளர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் புதிதாக 100% மால்ட்  மதுவை முற்றிலுமாக ஒழிக்க விரும்பும் அரசு, புதிதாக மது வகைகளை அறிமுகப்படுத்துவது ஏன்? என்று அமைச்சர் முத்துசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், பொதுமக்கள் விரும்புவதை கொடுக்கிறோம்.. அதேநேரம் மதுவில் இருந்து விடுபடவும் நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்.