சென்னையில் இருந்து திருப்பதிக்கு சென்ற கார் ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே விபத்தில் சிக்கியதில் காரில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். டேங்கர் லாரி மீது கார் மோதியதில் கார் முற்றிலுமாக நசுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.