தூத்துக்குடி மாவட்டதில் உள்ள மடத்தூர் ரோடு திரவிய ரத்தினபுரத்தில் வசிப்பவர்   செல்வன் (45) வெல்டிங் தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி சரோஜா (38). இவருக்கு பிளசி என்ற 12 வயது மகளும் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வன் தனது நண்பர்களுடன் தாமிரபரணி ஆற்றில் குளிக்க காரில் சென்றுள்ளார்.

இதையடுத்து செல்வன் ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு மேல்பகுதி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென தண்ணீரில் மூழ்கியதை பார்த்த அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன்பின் அவரது உடலை மீட்டு அவர்கள் கரைக்கு கொண்டு வந்து, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரது  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஏரல் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.