தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் அடுத்தடுத்து 9 கொலை சம்பவங்கள் அரங்கேறியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அந்த வகையில் கோவையில்-2, செங்கல்பட்டு-2, சிவகாசி-2, கன்னியாகுமரி-1, தென்காசி-1, திண்டுக்கல்-1 என மொத்தம் 9 கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.

இது ஒரு புறமிருக்க என்றால், கொள்ளை சம்பவங்களும் கடந்த சில தினங்களாக அதிகரித்து இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வரின் கீழ் செயல்படும் தமிழக போலீஸ் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்காமல் என்ன செய்கிறது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.