மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய எல்லையில் 100க்கும் மேற்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அந்த மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.

இதையடுத்து மீனவர்கள் திரும்பி வரும்போது படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது. இதன் காரணமாக ஒரு படகு சேதமடைந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பியதில் படகு ஒன்றுக்கு ரூ.1 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.