அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நவராத்திரி பண்டிகை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பாண்டியகை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள் விழாவில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகையின்போது ஒன்பது நாட்களும் ஒரு சிலர் விரதம் இருந்து தேவியை வழிபடுவது வழக்கம்.

நவராத்திரி பூஜையை பலர் ஒன்பது நாட்கள் விரதமிருந்து தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். நவராத்திரியின் 9 நாட்கள் அம்மனை பல்வேறு ரூபங்களில் அலங்கரித்து வழிபட வேண்டும். இந்நிலையில் நவராத்திரி, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களை ஒட்டி எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்ட் பயனர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி மொபைல், மடிக்கணினி, தங்க நகைகள், மளிகை பொருட்கள், பர்னிச்சர்கள், பேஷன் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை கிரெடிட் கார்டு மூலமாக வாங்கினால் 27.5% மற்றும் உடனடி தள்ளுபடி கிடைக்கும் என அறிவித்துள்ளது.